இது பழவகையைச் சேர்ந்தது. நாமெல்லாம் ஜூஸாகவும், ஜாம் ஆகவும் சாப்பிட்டிருக்கிறோம். அதுவல்ல இது! இன்று மாலை இதுவரை நான் செய்யாத, என் கன்னி முயற்சி!
என் அம்மா சிவகாமி அம்மாள் மேலிருந்து வந்து சாப்பிட்டுப்பார்த்து, நூற்றுக்கு நூற்றியொரு மார்க் கொடுத்து, போகும்போது, ‘நான் கொண்டு போறேண்டா!’ என்று எனக்கு மிச்சம் வைக்காமல், கையோடு எடுத்துச்சென்ற பண்டம்!
300 கிராம் திராட்சைக்கு நிறைய….. 12 பச்சைமிளகாய், சிறிது புளி (to round off the pulippu in Grapes), நிறைய வெல்லம், கண்ணைமூடிக்கொண்டு போட்ட கறிவேப்பிலை, கொத்தமல்லி, நிறைய இஞ்சி, வறுத்த வெந்தயத்தூள், பெருங்காயப்பொடி (இதுவும் கண்ணைமூடிக்கொண்டு) நாலு ஸ்பூன் உப்பு இவைகளை மிக்சியில் அரைத்தெடுத்து,200 கிராம் நல்லெண்ணெய் கொதித்ததும், கடுகு, மஞ்சள்பொடி போட்டு, கடுகு நன்றாக வெடித்ததும், அரைத்தெடுத்த கலவையை சுற்றென்று கலந்து, கைவிடாமல் 20 நிமிடம் கிளறினால் நீங்கள் போட்டோவில் பார்த்த பதம் வரும்!
RSS Feed
Twitter
10:46 PM
பாரதி மணி

Posted in
0 comments:
Post a Comment