Thursday, January 21, 2016

இதில் அரசியல் கிஞ்சித்தும் இல்லை!
அம்மா உணவகம் தொடங்கியதிலிருந்து ஒருநாளாவது போய் சாப்பிட்டு ருசி பார்க்க வேண்டுமென்று நினைத்ததுண்டு! அதே சமயம் மிகவும் தேவையானவர்களுக்கு போய்ச்சேரவேண்டியதை நாம் அபகரித்துக்கொள்ளக்கூடாதென்ற எண்ணமும் இருந்தது. அதனால் தான் நான் இதுவரை சென்னையில் ஒரு ரேஷன் கார்டு எடுப்பதையே தவிர்த்து வந்திருக்கிறேன்.
இன்று நிஷா பாலாவின் நாடகம் பார்த்துவிட்டு திரும்பும்போது காலியாக இருந்த, அப்போது தான் துடைத்துவிட்டது போன்று தென்பட்ட ஒரு அம்மா உணவத்தில் முதல் தடவையாக நுழைந்து என்ன இருக்கிறதென்று கேட்டேன். ரொட்டியும் தாலும் மட்டுமே இருந்தது. ரூ. ஐந்துக்கு 3 ரொட்டியும் தாலும் தட்டில் போட்டுக்கொடுத்தார்கள். ரொட்டி அப்போது செய்தது. ஏதோ வீட்டில் சாப்பிடுவது போல் மிகவும் நன்றாகவே இருந்தது. எனக்கு நாக்கு கொஞ்சம் நீளம். சுகா நாலுமுழமென்று சொல்லுவான். என்னால் எந்த நொட்டு நொசுக்கு சொல்லாமல் சாப்பிடமுடிந்தது. எல்லா ”பவன்”களையும் விட நன்றாகவே இருந்தது.
Baba Movie Still
அங்கே சுத்தமாக இருந்த எல்லா துப்புரவு அம்மாக்களும் பாபா படம் பார்த்திருந்ததால் எனக்கு ராஜ உபசாரம். சாப்பிட்டு முடித்தபின் Visitors Book-ல் எழுதச்சொன்னார்கள். மனது நிறைவாக இருந்ததால், உயர்வுநவிற்சியிலேயே எழுதி, கடைசியில் Long Live Amma! என்று எழுதாமல், கவனமாக Long Live Amma Canteen! என்று எழுதி கையெழுத்துப்போட்டேன்!
எனக்குப் பிடிச்சுருக்கு!

0 comments:

Post a Comment