Thursday, January 21, 2016

முந்தாநேற்று, டைரக்டர் ஷங்கர் ஆபீசிலிருந்து அழைப்பு வந்தது, உடனே ஆபீஸ் வரும்படி. நான்கு விருதுப்படங்களில் என்னோடு பணிபுரிந்த சூட்டிகை ஜெயராம் தான் இப்போது ஷங்கரின் வலதுகை. அன்று மாலையே மும்பை போய் புதுப்படம் “” கதாநாயகி ஆங்கில நடிகை எமி ஜாக்ஸனுக்கு — மதராச பட்டணம் கதாநாயகி — தமிழ் வசனங்களும், தமிழக உடல்மொழியும் கற்றுத்தரவேண்டுமென்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே மும்பைக்கான விமான டிக்கெட் வந்துவிட்டது
கர்ப்பூரம் போல….
பாரதி’யில் அப்பாவாக நடித்ததை விட, நான் முக்கியமாகக்கருதுவது ‘பாரதி யார்?’ என்று கேட்ட மராத்திய நடிகர் சாயாஜி ஷிண்டேயை படத்தில் ’பாரதி’யாக மாற்றியது…..நடிப்பிலும், உதடசைவுகளிலும். இது ஜெயராமுக்கு  நன்றாகவே தெரியும்.
‘Mani Sir! Hug me…and bless me!’
மாலையே மும்பை போய் எமி ஜாக்ஸனை சந்தித்து இரு நாட்கள் கூட இருந்து என்னால் இயன்றதை சொல்லிக்கொடுத்தேன். எனக்கு வாய்த்த நடிகை கர்ப்பூரம் மாதிரி…..அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. பலரும் என்னை நல்லவன் என்கிறார்கள். அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஏமியும். ”Mani Sir! Hug me…and bless me! You are a great person!’ என்று ஒரு சர்ட்டிபிகேட்டும் கொடுத்து, அணைத்துக்கொண்டு விடை பெற்றார்.
‘See you in Chennai..!’
ஷங்கரின் புதுப்படம் “” மிக மிக பிரும்மாண்டமான படம்! வரும் ஜூலை 15-ம் தேதிபடப்பிடிப்பு ஆரம்பம். மற்ற விவரங்கள்…..மூச்…..நான் சொல்லக்கூடாது!

0 comments:

Post a Comment