Thursday, January 21, 2016

எனக்கு ஒரு விஷயம் இன்னும் புரியவில்லை. எல்லா அம்மா உணவகங்களும் more or less ஈயோட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனாலேயே அங்கே ராஜமரியாதை. ஒரு தொழிலாளி கூட ஐந்து ரூபாய் பொங்கலை விட்டுவிட்டு ‘பவன்’களில் ஐம்பது ரூபாய் பொங்கலையே விரும்புகிறார்! Is it a case of status complex? I really do not know!!
நான் முதல் நாள் இரவு போன போது சுமார் 300 ரொட்டிகள் விற்காமல் மிச்சம் என்றார் கல்லாவில் இருந்த அம்மா!
இனி அம்மா உணவகத்து வெளியே, பாரதி மணி ஸ்பெஷல் “PONGAL TASTE ENHANCER” (மிளகு ஜீரகப்பொடி, சின்ன நெய் பாட்டில்) விற்பனை ஆரம்பம்.
கடவுள் இந்த வயதிலும் எந்த மருந்து மாத்திரை சாப்பிட நேராத….ஆரோக்யமான உடம்பையும் மனசையும் கொடுத்திருக்கிறான். தினமும் மூன்று வேளை அவனுக்கு நன்றி சொல்கிறேன். இது வரை டயட்டிங், அது கூடாது…இது சேராது என்று எதையும் ஒதுக்கியதில்லை. வாரமிருமுறை வாழைத்தண்டும், கீரையும், பாவக்காயும் இருக்கவேண்டும். நான் சாப்பிடும் உணவே எனக்கு மருந்து. நான் சாப்பிடும் ஒரே மாத்திரை கால்ஷியம் டாப்லெட் மட்டுமே!
பிடித்திருந்தால் அரைக்கிலோ காஜு கத்லியும், மைசூர்பாவும் உள்ளே போய்விடும்!…எனக்கு ஒன்றும் நேராது! நல்ல மழையில் இருமணி நேரம் சந்தோஷமாக விளையாடியிருக்கிறேன். ஜலதோஷம்?…………மூச்!
சாப்பாட்டுப்பண்டங்களில் வஞ்சகமே கூடாது! கடவுளுக்கு அது பிடிக்காது!
என் வயசுக்கு மருந்தொன்றும் சாப்பிடாமல், ஆரோக்யமாகவே இருக்கிறேன்! ஒரு தொந்தரவுமில்லை!

0 comments:

Post a Comment