நம்ம பாரதி மணி சார் கிட்டே அரை மணி நேரம் தொலைபேசினால், மனதில் உற்சாகம் கரை புரளும். சுவாரசியமான தகவல்கள்.
நான் கற்பனை செய்த 1950-களின் தில்லிக்கு இன்னும் அழுத்தமான உருவம் கிடைத்தது. 1955-ல் தில்லிக்கு நூற்று சில்லரை ரூபாய் சம்பளமும் எஸ்.எஸ்.எல்.சி சர்ட்டிபிகேட்டுமாகப் போன அவர், எம்.ஏ வும் மேலும் முடித்து பாரத் எலக்ட்ரானிக்ஸ் (சுஜாதாவுக்கு அங்கே பத்து வருடம் சீனியர்), அப்புறம் ஸ்டேட் ட்ரேடிங் கார்ப்பரேஷன் மேலதிகாரி என்று அமர்க்களப்படுத்தியவர். கூடவே நாடகங்கள்..
சாவகாசமாக ஒரு நாள் முழுக்க பேச வரலாமா என்று கேட்டிருக்கிறேன். கிடைக்கும்.
1950-களில் நிகழும் அச்சுதம் கேசவம் நாவல் முடித்து அவருக்கு சமர்ப்பணம் செய்ய அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அருளட்டும்.

RSS Feed
Twitter
12:06 PM
பாரதி மணி

Posted in
0 comments:
Post a Comment