Sunday, June 3, 2018

மாற்று நாடகவிழா முடிந்து நேற்று பெங்களூர் திரும்பினேன். திருப்பத்தூர் நண்பர் Tpg Balaji கொடுத்துவிட்ட இரண்டு பலாக்காய்களில் ஒன்று பலாக்காய் பொரியல் (இடிச்சக்கை துவரன்) ஆகிவிட்டது!
ஆக்கம்:: பாரதி மணி.


செய்முறை::
சின்ன பலாக்காய் ஒன்றை தோல் சீவி, பிசின் வரும் நடுத்தண்டையும் களைக. சின்ன சதுரத்துண்டுகளாக்கி உப்பு, மஞ்சள்பொடி, கொஞ்ஞ்சம் சர்க்கரை போட்டு வேகவைக்கவும். ஆறியபின் வடித்தெடுத்து லேசாக கீரைமத்தால் நசுக்கி வைக்கவும்.
அரை மூடித்தேங்காயை திருவி, 1 டீஸ்பூன் சீரகம், 3 காய்ந்தமிளகாய் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் இரு டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் சூடானதும் 3 காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு, 1 டே.ஸ்பூன் உ.பருப்பு, கடுகு போட்டு வெடிக்கும்போது, 2 இணுக்கு கறிவேப்பிலை சேர்த்து, மசித்த பலாக்காயைப்போட்டு கிண்டவும். அரைத்துவைத்த தேங்காய்த்துருவலையும் அதன் தலையில் 'அரோஹரா!' என்று சொல்லிக்கொண்டே தூவவும். "திருச்சிற்றம்பலம்!" என்று சொன்னாலும் ருசியாகத்தான் இருக்கும்!
இருமுறை கிளறி, குளறுபடியில்லாமல் அடுப்பை அணைத்துவிடவும்.
இப்போது உங்கள் முன்னால் இடிச்சக்கை துவரன் ரெடி!









0 comments:

Post a Comment