Thursday, January 21, 2016

கொஞ்சம் — கொஞ்சம் என்ன கொஞ்சம், நிறைய –தற்பெருமை இருந்தாலும் இதை சொல்லியே ஆகவேண்டும்.
பத்துவருடங்களுக்கு முன் நான் நடித்த கடைசி சீரியல் “கால் முளைத்த ஆசை!”. இது கே. பாலசந்தரின் மின்பிம்பங்களுக்காக எம்.ஈ. சொர்ணவேல் இயக்கியது. சொர்ணவேல் புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் டைரக்‌ஷன் கற்றவர். இப்போது அமெரிக்காவில் ஒரு யூனிவெர்சிடியில் சினி டைரக்‌ஷன் கற்றுக்கொடுக்கிறார். இதற்கு கதை வசனம் எஸ். ராமகிருஷ்ணன். மொத்தக்கதையும் 11 எபிசோடில் முடிந்துவிடும்.
மொத்த சீரியலும் காரைக்குடியில் படமாக்கப்பட்டது. ஒரு சீரியலை எப்படி எடுக்கவேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். இழுவை, அறுவை சுத்தமாக இருக்காது. நடிக்கும்போதே எனக்கு மனநிறைவைத் தந்த சீரியல்.
கொசுறு: இந்த சீரியலை தொடர்ந்து பார்த்தபின் தான் ரஜினி என்னை பாபா படத்தில் அரசியல்வாதி கந்தனாக நடிக்க கேட்டுக்கொண்டார்.




0 comments:

Post a Comment