Tuesday, January 19, 2016



மேசான் காடுகளிலிருந்தோ ஆல்ப்ஸ் மலைத்தொடர்களிலிருந்தோ தேர்ந்தெடுக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட அரிய மூலிகைகளிலிருந்து தயாராகாமல்….
அஞ்சு தேங்காயை மட்டும் வெச்சு ஆத்துலேயே செஞ்சது…
–ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் (தாளிக்கும் ஓசை)
Now over to our பாரதி மணி Sir…
ன் சிறுவயதில் கிராமத்தில் குழந்தைகளுக்கு உடம்பில் தேய்க்கும் தேங்காயெண்ணெய் இப்படி தயாரிக்கப்பட்டது தான். கொப்பரையிலிருந்து செக்கில் எடுத்த எண்ணெயைவிட இது மஞ்சளாக இருக்கக்காரணம் அதை காய்ச்சுவதால் தான்! பிறந்த குழந்தைகளுக்கு நடு உச்சிப்பக்கம் எலும்பு இல்லாமல் குழிவாக, மிருதுவாக இருக்கும். குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை அந்தப்பகுதியில் ஒருநாளைக்கு ஐந்து தடவையாவது இந்த தேங்காயெண்ணையைத்தடவ வேண்டும். அதற்கு ”உச்சி வைப்பது” அல்லது “தலைக்கு வைப்பது” என்பது சொலவடை.
இரண்டு பெரிய முற்றின யாழ்ப்பாணம் தேங்காயிலிருந்து படத்தில் வருமளவு எண்ணெய் கிடைக்கும். திருவின தேங்காயை ஒன்றிரண்டாக அரைத்து அதிலிருந்து முதல்/இரண்டாம் பால் எடுத்து இரண்டாம் பாலை முதலாவதாக வாணலியில் விட்டு கிளற வேண்டும். பின் முதல் பாலையும் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். வெள்ளையாக இருக்கும் தேங்காய்க்கசண்டுகள் பொன்னிறமாக மாறத்துவங்கும்.
அந்த கசண்டை அப்படியே சாப்பிட்டால் தித்திப்புடன் நன்றாக இருக்கும். ஆனால் வயிற்றுக்குக்கோளாறு!…..தலை சுற்றும்!! என் பாட்டி கொஞ்சம் வெல்லப்பாகு காய்ச்சி அதில் இதைக்கலந்து தேங்காய்த்திரட்டுப்பாலாக உருண்டை பிடித்துத்தருவாள்! அதை இதுவரை சாப்பிட்டிராதவர்களுக்கு மோட்ச சாம்ராஜ்யம் கிடைப்பது உறுதியில்லை!
என் குழந்தைகள் வரை இந்தத் தேங்காயெண்ணெய் — ‘உருக்கின எண்ணெய்’ — தான் “உச்சிக்கு வைத்திருக்கிறேன்” பிறகு அந்த இடத்தை Johnson & Johnson Baby Oilபிடித்துக்கொண்டது!

0 comments:

Post a Comment