Wednesday, January 20, 2016

ஐயோ!….போதும்யா சமையல் குறிப்பு!…….சரி…..சரி! இந்த அவியலின் ஹைலைட்டு மட்டும் சொல்லிட்டுப்போயிடறேன்!…..ப்ளீஸ்!

1. இதில் தயிர் சேர்க்காமல், தேவையான அளவு புளி — புதுப்புளி உத்தமம் — சேர்க்கவேண்டும்!
2. சமைத்து, கீழறிக்கி வைத்த அவியலில் இரண்டு மூன்று டேபிள்ஸ்பூன் பச்சைத்தேங்காயெண்ணெய் சேர்த்து கலந்து வைக்கவும்.
3. தயிர் சேராததால் பார்க்க அழகாக, மஞ்சளாக இருக்கும். இலையில் (சிரட்டைத்தவி – கொட்டாங்கச்சி அகப்பையால்) பரிமாறும்போது, ‘சொத்’தென்று போட்ட இடத்தில் கம்பீரமாக இருக்கும்.
4. சூடான அவியலில் தயிர் சேர்க்கும்போது, சூட்டில் தயிர் மோராகி, இலையில் போட்டவுடன், தானே அன்னத்தை நோக்கி ஓடையாக ஓடிவரும் வாய்ப்பு அதிகம்!
5. கறிவேப்பிலையை ஒதுக்கிவைக்காமல் விரும்பிச்சாப்பிடுபவர்கள் ஒரு கொத்து கறிவேப்பிலையை கூடச்சேர்க்கலாம். சாப்பிட்டு முடிந்தபின், தேங்காய்க் கலவையில், பச்சைத் தேங்காயெண்ணெயில் கலந்திருக்கும் கறிவேப்பிலையை தனியாகச் சாப்பிட, ’தனி’ ருசி! சாப்பிட்டவர்களுக்குத் தெரியும்!
பி.கு: 2000-த்தின் தொடக்கத்தில் சங்கீத சீசனுக்கு மியூசிக் அகாடெமியில் கேன்ட்டீன் நடத்திய அறுசுவை நடராஜன் செய்த மலையாள அவியலில் ‘குற்றம் குற்றமே!’ என்று சொன்ன இந்த நக்கீரனை “உங்களால் செய்துகாட்டமுடியுமா?” என்று கேட்ட சவாலை ஏற்று, அடுத்தநாள் அதிகாலை அங்கே Lecture-Demonstration தொடங்குமுன்பே போய் அவர்கள் சமையலறையிலேயே செய்துகாட்டி, ‘ஓய்!….நீர் மன்னன்யா!” என்று சர்ட்டிபிகேட்டும் வாங்கியவன்!

0 comments:

Post a Comment