Thursday, January 21, 2016

என்னது?….நார்த்தங்காயில் வற்றல்குழம்பா என்று சிலர் கேட்கலாம். ஆமாம்……இது பச்சை நார்த்தங்காயில்! இது என் அம்மா ரெசிப்பி இல்லை….. சென்னை வந்தபிறகு நானே செய்துபார்க்கலாமே என்று ஒருநாள் முயன்றுபார்த்து, ஓஹோவென்று என்னை பாராட்டிக்கொண்டது. இன்று கசப்பை விரும்பும் என் நாக்குக்கு ரொம்பவே ருசியாக இருந்தது. மேலேயிருந்து சிவகாமி அம்மாள் வந்து, சாப்பிட்டுப்பார்த்து சப்புக்கொட்டிக்கொண்டே போனது தான் எனக்கு சர்ட்டிபிகேட்!

முன்பெல்லாம் நார்த்தங்காய் வாங்குவதற்கென்றே மயிலாப்பூர் குளம் பக்கம் 12-Cயில் போய்வருவேன். இதில் பச்சைக்கிச்சிலிக்காயை நார்த்தங்காய் என்று தள்ளிவிடும் அபாயம் உண்டு! நார்த்தாங்காயின் வெளித்தோல் ‘’ பட விக்ரம் மேக்கப் மாதிரி கரடுமுரடாக இருக்கவேண்டும்!

என் முகநூல் நண்பன் கண்ணன் ஜெகந்நாதன் என் புத்தகம் ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ படித்துவிட்டு, ‘சார்! இனிமெ உங்க நார்த்தங்காய் பிரச்னையை எங்கிட்டெ விட்டுடுங்கோ! என்னுடைய சின்னத்தோட்டத்தில் ஆர்கானிக்காக வளர்க்கிறேன். இன்னும் பெரிசாகலே!’ என்றவர் நேற்று ஆறு பிஞ்சு நார்த்தங்காயுடன் வந்து நிற்கிறார்! எனக்கு ஒளவைக்குக்கிடைத்த நெல்லிக்கனியை விட இனிப்பாக இருந்தது.
ரெசிப்பி எல்லாம் பெரிசா ஒண்ணுமில்லே. தான் இரண்டு நார்த்தங்காய் இருப்பதால் புளியின் அளவை பாதியாகக்குறைத்துவிடவும். உப்பும், வெல்லமும், பெருங்காயமும் கொஞ்சம் தூக்கலாக இருக்கலாம்!

செய்து பாருங்கள்…..கொஞ்சம் நீளநாக்குள்ளவர்களுக்கு ரொம்பப்பிடிக்கும்!

0 comments:

Post a Comment