போனவருடம் இதே
நாளில் -- நவம்பர் 8, 2016 -- பெங்களூர் சக்ரா மருத்துவமனையில்
முதுகுத்தண்டு ஆபரேஷனுக்காக -- Laperoscopic Decompression Surgery of L4, L5 S6
of Spine -- மாலை ஏழரை
மணிக்கு அட்மிட் ஆனேன். அடுத்தநாள் காலை 10.30-க்குத்தான்
ஆபரேஷன். பொழுதுபோகாமல் என் அறையிலிருந்த டிவியை பார்த்துக்கொண்டிருந்தேன்.
திடீரென இரவு எட்டுமணிக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவியில் தோன்றி ‘இன்றிலிருந்து
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள்
புழக்கத்திலிருந்து நீக்கப்படுகின்றன’
என்ற அறிவிப்பை திடீரென அறிவித்தார்.
‘கள்ளத்தனமான லக்ஷ்மி கடாட்சம்’ எனக்கு
எப்போதுமே இருந்ததில்லையாதலால் மடியில் கனமில்லாமல் ‘இனி
கள்ளப்பணம் கொட்டிக்கிடக்கும் பணமுதலைகளும், அரசியல்வாதிகளும்
“செத்தாண்டா...சேகரு!” என்று
உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே அவர் பேச்சைக்கேட்டேன்.
ஆனால்
என்னைப்பார்க்க வந்த டாக்டர்கள் முகங்களில் பேயறைந்த சாயல் தெளிவாகவே தென்பட்டது. ‘ஐயோ! எப்படி
சமாளிக்கப்போகிறோம்!’ என்ற பீதி தெரிந்தது. மருத்துவமனையெங்கும்
அன்றிரவு அதைப்பற்றியே பேச்சு! பல டாக்டர்கள் மோடியை அப்போது நேரில் பார்த்தால், விஷ ஊசி
போட்டு உடனே கொலை செய்யவும்
அஞ்சமாட்டார்களெனத் தோன்றியது!
என்
மனக்கணக்கில் என்வசம் கையிலிருந்த (அப்போது செல்லாத) ரூ.500/ரூ.1000 நோட்டுக்களின் கூட்டுத்தொகை பத்தாயிரத்தை
தாண்டாததால், படுத்தவுடன் தூக்கம் வந்தது!
அடுத்தநாள்
காலை என்னை ஆபரேஷனுக்கு தயார் செய்து ஆபரேஷன் தியேட்டருக்கு வீல் ஸ்ட்ரெச்சரில்
தள்ளிக்கொண்டு போகப்பட்டேன். சினிமாவில் வருவது மாதிரி சிவப்பு விளக்கில் பெரிதாக OPERATION THEATRE என்று எழுதியிருந்தது. ஆனால் என் உறவினர்கள்
கூட ஓடி வரவில்லை. என் மகள் மட்டும் இருந்தாள்.
உள்ளே
போனவுடன் அனெஸ்தீஷியா டாக்டர்களிடம் Demonetization
பற்றிய ஜோக்குகளை உதிர்த்துக்கொண்டிருந்தேன்.
It was a major surgery; முதுகின்
கீழ்ப்பகுதியில் ஆறு அங்குலத்துக்கு கீறுவதற்கு பதிலாக இரு துளைகள் போட்டு
கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மூலம் தண்டுவடத்தை அழுத்திக்கொண்டிருக்கும் எலும்புகளை
உடைத்து சரிசெய்வது இந்த ஆபரேஷன். ஜெனரல்
அனெஸ்தீஷியா ஏற்றியபிறகு, டாக்டர் என்னிடம், ‘இந்த ஆபரேஷன் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா?’ என்றுகேட்டார். நான் அவரிடம்,
அதைப்பற்றி
நீங்களல்லவா கவலைப்படவேண்டும்?....என்னைப்பொறுத்தவரை, I am in your safe hands! Why should I worry?'
என்று பதிலளித்தேன்.
அப்போது
கொடுத்த மயக்கமருந்து சரியாக வேலை செய்கிறதா என்பதைக்கணிக்க ஒரு டாக்டர், “By the way, you didn't tell me your full
name? உங்க பேரென்ன?” என்று கேட்டதற்கு, முகத்தில் போட்டிருந்த சுவாசக்குழாயை கையால்
விலக்கி, “My name is Narendra
Modi!' என்று பதிலளித்தேன்.
திடுக்கிட்ட டாக்டர்கள் அனைவரும் ஒரே குரலில், “WHAT?" என்றார்கள்.
திரும்பவும் மாஸ்க்கை கையால் விலக்கிப்பிடித்துக்கொண்டு, “I am Narendra Damodhardar Modi!......The
Prime Minister of India!" என்று
ஸ்பஷ்டமாக சொல்லிவிட்டு சுவாசக்குழாயை மறுபடியும் மாட்டிக்கொண்டேன். பக்கத்திலிருந்த
ஒரு மலையாளி நர்ஸ் சத்தமாக, “எடீ ஸூஸம்மே! ஓடி வரூ! இயாள் எந்து
பறயுந்நு...கேக்கு? “ என்று அலறினாள். அது தான் நான்
கடைசியாகக்கேட்டது! பிறகு நினைவில்லை!
இந்தசம்பவம்
நான் கோமாவில் இருக்கும்போதே ஆஸ்பத்திரி முழுவதும், பின்னர்
பெங்களூர் டாக்டர்களுக்கிடையிலும் வாட்ஸப்பில்
வைரலாக பரவியது. ஆபரேஷன் முடிந்து நான் ICU-வுக்கு
மாறினதும், ஜூனியர் டாக்டர்கள் ஓரிருவராக என்னை வந்து
பார்த்துவிட்டு, நமுட்டுச்சிரிப்புடன் "Oh! You are Narendra Modi!" என்று விசாரித்துவிட்டுப்போனார்கள்!
அவர்களுக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஒரு எண்பது வயது நோயாளி “டாக்டர், எனக்கு
ஆபரேஷன் நல்லபடியா ஆகுமா இல்லே செத்திருவேனா?, நான் வரும்
டோக்யோ ஒலிம்பிக்ஸில் ஓடமுடியுமா?' என்றெல்லாம் பயத்தோடு கேள்விகள் கேட்காமல்
திமிர்த்தனமாக என் பெயர் மோடி என்று பதில் சொன்னது தான்!
அடுத்தநாள்
காலையிலேயே அறையில் குளிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு ஆபரேஷன் செய்த
டாக்டர் ருத்ரப்பா “You're
Surgeons' delight. ப்ரெஷர், டயபெட்டீஸ், போன்ற எந்த
உபாதைகளும் இல்லாத நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்வது எங்களுக்கு வீட்டில் விளையும்
பிஞ்சு காய்கறிகளை வைத்து சுவையாக சமையல் செய்வதைப்போல. உங்களிடமிருந்து கால்
அவுன்ஸ் ரத்தம் கூட வீணாகவில்லை. I
will remember this surgery for a long time!" என்று பாராட்டினார். அன்று மதியமே
வீட்டுக்கு விரட்டி விட்டார்!
ஆஸ்பத்திரியில்
என்னை வாஞ்சையுடன் கவனித்துக்கொண்ட நர்ஸ் ஸூஸம்மா! அந்தம்மா பிரியும்போது
சொன்ன வார்த்தைகள்:::”அச்சோ! நிங்ஙளெப்பொலெ ஒரு ஆளெ இதுவரெ கண்டிட்டில்ல!”
அருமை....
ReplyDeleteMy friend Muthukrishnan from Mumbai referred me ro your blogs. You have a lot of similarities with writer Sujatha. Keep writing.
ReplyDelete